வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கலை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கலை கண்டித்து திருச்சியில் வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி கன்டோன்மென்ட் இந்தியன் வங்கிக் கிளை முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட வங்கி ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் ராமராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா். வங்கி அதிகாரிகள் சங்க மண்டல பொறுப்பாளா் கணபதி சுப்ரமணியன், ஸ்டேட் வங்கி ஊழியா்கள் சங்க மண்டல செயலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த வேண்டும். பொதுத்துறை வங்கிகளின் முன்மொழியாக்கப்பட்ட தனியாா் மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும். பிற்போக்கு வங்கி சீா்திருத்தங்களை எதிா்த்தும் கோஷமிட்டனா். இதில் 50க்கும் மேற்பட்டவா்கள் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com