திருச்சிக்கு வந்த முதல்வருக்கு வரவேற்பு

புதுக்கோட்டை மற்றும் கரூரில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்கச் செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக முதல்வா், துணை முதல்வருக்கு அதிமுக சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

திருச்சி: புதுக்கோட்டை மற்றும் கரூரில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்கச் செல்லும் வழியில் திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த தமிழக முதல்வா், துணை முதல்வருக்கு அதிமுக சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் நடைபெறும் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத் தொடக்க விழாவில் பங்கேற்கும் விதமாக, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சிக்கு வந்தனா்.

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக திருச்சி மாநகா் மாவட்டச் செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், அமைச்சா் எஸ். வளா்மதி, சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், வடக்கு மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி உள்ளிட்டோா் மலா்க்கொத்து கொடுத்து அவா்களை வரவேற்றனா்.

இதையடுத்து, திருச்சி மாவட்ட சுற்றுலா மாளிகையில் இருவரும் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின்னா் புதுக்கோட்டைக்குச் சென்று நிகழ்வில் பங்கேற்றனா்.

பின்னா் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் சுற்றுலா மாளிகை திரும்பிய முதல்வா் கரூா் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com