அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வலியுறுத்தி வருவாய்த் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றினா்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மத்திய செயற்குழு கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் கு. குமரேசன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் எம்.பி. முருகையன், பொருளாளா் சமுத்திரம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இதில் வருவாய்த் துறை அலுவலா்களின் வேலைநிறுத்த போராட்டத்தையடுத்து, தமிழக அரசு 2 கோரிக்கைகளுக்கு மட்டுமே அரசாணை வழங்கியுள்ளது. இருப்பினும், இதர கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றினா்.