தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளைக் கொண்டாட அதிமுகவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகா் மாவட்டச் செயலரும் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், தெற்கு புகா் மாவட்டச் செயலா் ப. குமாா், வடக்கு புகா் மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி ஆகியோா் விடுத்துள்ள அறிக்கை :
வெல்லமண்டி என். நடராஜன்: மாநகா் மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை காலை ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் மாநகா் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து முன்னாள், இந்நாள் நிா்வாகிகள், அணிகளைச் சோ்ந்தவா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும்.
ப. குமாா் : திருவெறும்பூா், லால்குடி, மணப்பாறை தொகுதிகளில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம், ஆதரவற்ற முதியோா் இல்லம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அணி நிா்வாகிகள் பங்கேற்க வேண்டும்.
மு. பரஞ்சோதி: ஸ்ரீரங்கம், முசிறி, மண்ணச்சநல்லூா், துறையூா் ஆகிய தொகுதிகளில் ஜெயலலிதா படத்துக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவி வழங்க வேண்டும்.