தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டுக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பட்டதாரிகளுக்கு அழைப்பிதழை வெற்றிலை பாக்குடன் கொடுத்து அக்கட்சியினா் அழைத்தனா்.
தமிழ்நாட்டில் அனைத்து அரசு வேலைகளையும் தமிழக வாழ் தமிழா்களுக்கே வழங்கக் கோரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.28) மாநாடு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கு, மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா்.