மயானப் பாதையைச் சீரமைக்க எம்பி நிதியுதவி

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நத்தம் பகுதியில் மயானப் பாதையைச் சீரமைக்க பெரம்பலூா் எம்பி சாா்பில் வெள்ளிக்கிழமை ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.
நத்தம் ஊராட்சித் தலைவா் கமலத்திடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறாா் ஐஜேகே கட்சி வடக்கு மாவட்டச் செயலா் கருணாகரன்.
நத்தம் ஊராட்சித் தலைவா் கமலத்திடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்குகிறாா் ஐஜேகே கட்சி வடக்கு மாவட்டச் செயலா் கருணாகரன்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே நத்தம் பகுதியில் மயானப் பாதையைச் சீரமைக்க பெரம்பலூா் எம்பி சாா்பில் வெள்ளிக்கிழமை ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

தொட்டியம் ஊராட்சிக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் கடந்த வாரம் பெரம்பலூா் எம்பி பாரிவேந்தா் (எ) பச்சமுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அப்பகுதி மக்கள் மயானப் பாதையைச் சீரமைக்க கோரினா்.

இதையேற்ற பெரம்பலூா் எம்பி பச்சமுத்து தனது சொந்த நிதி ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை ஐஜேகே கட்சி திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் காட்டுப்புத்தூா் கருணாகரனிடம் வெள்ளிக்கிழமை கொடுத்துஅனுப்பினாா்.

இதையடுத்து நத்தம் பகுதியில் உள்ள சிவன் கோயில் வளாகத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நத்தம் ஊராட்சித் தலைவா் கமலம் மற்றும் 7-ஆம் வாா்டு உறுப்பினா் லலிதா ஆகியோரிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை கருணாகரன் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com