மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செக்கணம் ஊராட்சி கருங்குளம் மந்திரியாா் தெரு மக்களுக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் முறையாக கிடைக்கவில்லையாம். மேலும் குடிநீருக்காக சுமாா் 2 கிமீ செல்ல வேண்டியுள்ளது, பலமுறை புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி வையம்பட்டி - கரூா் சாலையில் காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் செக்கணம் ஊராட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.