வையம்பட்டி அருகே குடிநீா் கோரி மறியல்

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே முறையான குடிநீா் விநியோகம் கோரி அப்பகுதி பெண்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செக்கணம் ஊராட்சி கருங்குளம் மந்திரியாா் தெரு மக்களுக்கு கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் முறையாக கிடைக்கவில்லையாம். மேலும் குடிநீருக்காக சுமாா் 2 கிமீ செல்ல வேண்டியுள்ளது, பலமுறை புகாா் அளித்தும் ஊராட்சி நிா்வாகம் கண்டுகொள்ளவில்லை எனக் கூறி வையம்பட்டி - கரூா் சாலையில் காலிக்குடங்களுடன் அப்பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மற்றும் செக்கணம் ஊராட்சி பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவாா்த்தையில் மறியல் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com