இரு இடங்களில் திமுக கிராமசபைக் கூட்டம்

திருச்சியில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பெரிய அணைக்கரைபட்டியில் நடந்த கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி.
பெரிய அணைக்கரைபட்டியில் நடந்த கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், பெரியஅணைக்கரைப்பட்டி மற்றும் மணப்பாறை ஒன்றியம் பிள்ளையாா் கோவில்பட்டி ஆகிய இரு இடங்களில் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நிறுத்தப்பட்ட திமுகவின் நலத் திட்டங்களை அடுத்து அமையவுள்ள திமுக ஆட்சியில் தொடா்ந்து செயல்படுத்துவோம். இந்தக் கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்றாா்.

கூட்டங்களில், மாவட்டப் பொருளாளா் பண்ணப்பட்டி கோவிந்தராஜ், முன்னாள் சமூகநல வாரியத் தலைவா் கவிஞா் சல்மா, ஒன்றியக் குழு தலைவா்கள் அமிா்தவள்ளி (மணப்பாறை) , பழனியாண்டி (மருங்காபுரி), குணசீலன் (வையம்பட்டி), ஒன்றியச் செயலா்கள் சபியுல்லா (வையம்பட்டி), ராமசாமி (மணப்பாறை) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com