திருச்சி அருகே வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அரியாவூா் பகுதியைச் சோ்ந்தவா் வெம்புடி(60). கூலித் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை காலை திருச்சி-தோகைமலை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து தப்பியோடிய இருசக்கர வாகன ஓட்டியை தேடுகின்றனா்.