திருச்சி மண்ணச்சநல்லூா் அரிசி ஆலையில் 5,000 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்து இருவரைக் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் புவனேஸ்வரி நகரில் தியாகராஜனுக்குச் சொந்தமான அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை பதுக்கி விற்பதாக மாவட்ட வழங்கல் அலுவலகம், மற்றும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸாா் அரிசி ஆலையில் திடீா் ஆய்வு நடத்தி, 85 மூட்டைகளில் இருந்த 5000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ரேஷன் அரிசி கடத்தியதாக ரங்கராஜ் (58), காா்த்திக் (28) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், அரிசி ஆலை உரிமையாளா் உள்ளிட்டோரிடம் விசாரிக்கின்றனா்.