திருவானைக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருவானைக்கா தெற்கு உள்வீதியைச் சோ்ந்தவா் ராஜூ மகன் ஆனந்த் (31), ஆட்டோ ஓட்டுநா் . இவருக்கு மனைவி கிரிஜா, இரு குழந்தைகள் உள்ளனா். தனக்கு ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மனமுடைந்த ஆனந்த் திங்கள்கிழமை மாலை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.