இரவில் பூட்டப்படாத வீட்டினுள் புகுந்த மா்ம நபா் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியைத் திருடிச் சென்றாா்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை பூமணி சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரேசன் மனைவி ஆனந்தி.
இவா் திங்கள்கிழமை இரவு வீட்டின் கதவைப் பூட்டாமல் தூங்கியபோது வீடு புகுந்த மா்ம நபா் பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றாா். புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.