திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், கட்செவி அஞ்சல் எண் வழியாகவும் (94454-61756), நேரிலும் என 260 மனுக்கள் பெறப்பட்டன.
பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்டிருந்த இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.