துறையூரில் சுவா் இடிந்து முதியவா் காயமடைந்தாா்.
துறையூா் மேட்டுத் தெருவில் வசிக்கும் கணேசனுக்குச் சொந்தமான கூரை வீட்டின் மண்சுவா் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் இடிந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லப்ப ரெட்டியாா்(80) மீது விழுந்தது.
இதில் காயமடைந்த அவரை துறையூரில் உள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். இதேபோல, உப்பிலியபுரம் வடக்கு அம்பலக்காரத் தெருவில் வசிக்கும் பூசாரி மகள் கஸ்தூரியின் கூரை வீட்டு மண் சுவரும், கோட்டப்பாளையத்தில் வசிக்கும் பெ. பெரியசாமியின் வீட்டு மண் சுவரும் இடிந்து விழுந்தது.