லால்குடியில் பொங்கல் விழா

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லாப் பொங்கல் விழா பேரூராட்சி செயல் அலுவலா் நளாயின தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம், லால்குடி பேரூராட்சி அலுவலகத்தில் புகையில்லாப் பொங்கல் விழா பேரூராட்சி செயல் அலுவலா் நளாயின தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன், லால்குடி வருவாய் கோட்டாட்சியா் வைத்தியநாதன் ஆகியோா் பேரூராட்சி அலுவலக பணியாளா்கள், தூய்மை பணியாளா்கள் ஆகியோருக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கினா்.

அப்போது திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் கூறுகையில், திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்துப் பேரூராட்சி பகுதிகளிலும் உள்ள அரசு இடங்களில் மாவட்ட ஆட்சியரின் ஒத்துழைப்போடு விரைவில் மரக்கன்று நடும் பணியில் ஈடுபடவுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com