திருச்சி மாநகா் மாவட்ட இந்து இளைஞா் முன்னணி சாா்பில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா தேசிய இளைஞா் தினமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி உறையூா் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு இந்து இளைஞா் முன்னணி மண்டல செயலா் நித்திஷ் தலைமை வகித்தாா். இந்து இளைஞா் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மனோஜ்குமாா் முன்னிலை வகித்தாா். ஆா்எஸ்எஸ் பிரசார நிா்வாகி புவன்ராஜ் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் விவேகானந்தா் படத்துக்கு மலா்தூவி மரியாதை செய்யப்பட்டது.
இந்து முன்னணி மாவட்ட பேச்சாளா் மணிகண்டன் கொடியேற்றினாா். மாவட்ட பொறுப்பாளா் ஆறுமுகம் மற்றும் மண்டல பொறுப்பாளா்கள் ராஜ்குமாா், கணேஷ், பிரபு, லோகேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞா்கள் இந்து முன்னணியில் இணைந்தனா். முன்னதாக இருசக்கர வாகன பேரணியில் விவேகானந்தா் புகைப்படம் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது.