மாநகரக் காவல்துறை சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
மாநகர காவல்துணை ஆணையா் (குற்றம் மற்றும் போக்குவரத்து) அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநகர காவல் துணை ஆணையா் வேதரத்தினம் தலைமை வகிக்க, பெண் காவலா்கள் ஒன்றிணைந்து மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினா். நிகழ்வில் காவலா்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.உதவி ஆணையா்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமாா்கள் வரவழைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.