சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த பாவை விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
மாா்கழி இசைத் திருவிழாவையொட்டி ( பாவை விழா ) கோயிலைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை குறித்து கட்டுரைப் போட்டி, பாட்டுப்போட்டி நடைபெற்றது.
இதில் வென்றோருக்கு கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் , கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் பரிசு வழங்கினாா்.
விழாவில் மண்ணச்சநல்லூா் சிதம்பரம்பிள்ளை மகளிா் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் அகிலாண்டேஸ்வரி, ஆன்மிக வகுப்பு ஆசிரியா் செல்வராஜ், புலவா் ஜெகநாதன் ஆகியோா் போட்டி நடுவா்களாகப் பங்கேற்றனா்.