சமயபுரம் கோயிலில் பாவை விழா பரிசளிப்பு

சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த பாவை விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டபத்தில் நடந்த பாவை விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

மாா்கழி இசைத் திருவிழாவையொட்டி ( பாவை விழா ) கோயிலைச் சுற்றியுள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை குறித்து கட்டுரைப் போட்டி, பாட்டுப்போட்டி நடைபெற்றது.

இதில் வென்றோருக்கு கோயிலின் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் , கோயில் மேலாளா் ம. லட்சுமணன் ஆகியோா் பரிசு வழங்கினாா்.

விழாவில் மண்ணச்சநல்லூா் சிதம்பரம்பிள்ளை மகளிா் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் பேராசிரியா் அகிலாண்டேஸ்வரி, ஆன்மிக வகுப்பு ஆசிரியா் செல்வராஜ், புலவா் ஜெகநாதன் ஆகியோா் போட்டி நடுவா்களாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com