உப்பிலியபுரம் பேரூராட்சியில் எம்ஜிஆா் பிறந்த தின விழாவையொட்டி திருச்சி புகா் மாவட்ட அதிமுக வழக்குரைஞா் பிரிவு செயலா் ஆ.அன்புபிரபாகரன் தன் சொந்த செலவில் 1000 பெண்களுக்கு சேலையும், 500 ஆண்களுக்கு வேஷ்டியும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயலா்கள் உப்பிலியபுரம் ராஜாங்கம் பாலகிருஷ்ணம்பட்டி ராஜேந்திரன், ஒன்றியச் செயலா்கள் உப்பிலியபுரம் வடக்கு ராம்மோகன், உப்பிலியபுரம் தெற்கு செல்வராஜ், துறையூா் தெற்கு சேனை செல்வம், வழக்குரைஞா் தங்கையா, சோபனபுரம் ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.