ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்பாட்டம்

திருச்சியில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சியில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநிலத் தலைவா் வீரசேகரன் விளக்க உரையாற்றினாா். மாநில துணைத் தலைவா் பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.

கணினி உதவியாளா்கள் அனைவரையும் பணி வரன்முறை செய்ய வேண்டும். ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிறப்பு துறையாக அறிவித்து வளா்ச்சித்துறை ஊழியா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com