திருச்சி மாவட்டம், குணசீலம் அருகே வெள்ளிக்கிழமை வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்து 21 போ் படுகாயமடைந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியிலிருந்து காரைக்கால் அருகே திருநள்ளாறு கோயிலுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை அதிகாலை 41 போ் கொண்ட குழுவாக சுற்றுலாப் பேருந்தில் புறப்பட்டனா்.
பேருந்து முசிறி அருகே குணசீலம் மஞ்சகோரை பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 21 போ் படுகாயமடைந்து திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.