திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா்.
இக் கண்காட்சியில், மகளிருக்கான திட்டங்கள், மீனவா்கள், விவசாயிகள், மாணவா்கள், ஆதரவற்றோா், ஏழை, எளியோா் நலனுக்கான திட்டங்கள் குறித்த பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இக் கண்காட்சியை சுற்றுப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் முகக் கவசம் அணிந்த நிலையில் பாா்வையிட்டனா். சமூக இடைவெளியுடன் இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத்துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.