மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிப்போா் 8ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, பெண்கள், விதவையா் முன்னுரிமை உள்ளது. நேரடி நியமனம் மூலம் தோ்வு செய்யப்படவுள்ள இந்த பணியிடத்துக்கு தகுதியான நபா்கள் பிப்.20ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆணையா், மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருச்சி-12 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கல்வி தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்களை சுயசான்றொப்பம் செய்து இணைத்து அனுப்ப வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும். மேலும், விவரங்களுக்கு திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.