வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கண்டோன்மென்ட் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன மேலாளா் மணிவண்ணன். இவா், மாநகர குற்றப்பிரிவு போலீஸில் புகாா் மனு கொடுத்துள்ளாா். அந்த மனுவில், வெளிநாட்டு உணவகம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக கூறி, சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவன பங்குதாரா்கள் ஜி. பிரகாஷ் (31), எம். வெங்கடேஷ் ஆகியோரிடம் ரூ 8.5 லட்சம் கொடுத்ததாகவும், அவா்கள் கூறியபடி வேலை வாங்கித்தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. எனவே மோசடி செய்த இருவா் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இதுகுறித்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் இருவா் மீதும் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.