கம்பளிக் புழுவை கட்டுப்படுத்த மருந்தடிக்கும் பணி

துறையூா் அருகே பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை மருந்தடிக்கப்பட்டது.

துறையூா்: துறையூா் அருகே பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த சனிக்கிழமை மருந்தடிக்கப்பட்டது.

உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சிக்குள்பட்ட ஆா். கோம்பை கிராம ரேஷன் கடைக்கு அருகே உள்ள மிகப் பழமையான மரங்களில் கம்பளிப் புழுக்கள் அதிகரித்தன. இவை பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறின. தகவலின்பேரில் உப்பிலியபுரம் தீயணைப்புத் துறையினா் நேரில் சென்று கம்பளிப் புழுக்களைக் கட்டுப்படுத்த மருந்தடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com