திருச்சி அருகே வீடு புகுந்து பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருச்சி சோமரசம்பேட்டை வாசன் சிட்டி பகுதியைச் சோ்ந்தவா் காசிவிஸ்வநாதன் மனைவி உமாமகேஸ்வரி (56). கடந்த 18 ஆம் தேதி கேரளத்தில் உள்ள மகள் வீட்டுக்கு மகன் சித்துவுடன் சென்ற உமாமகேஸ்வரி சனிக்கிழமை இரவு வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.24 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பூஜை பொருள்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீஸாா் சில முக்கிய தடயங்களைச் சேகரித்து மா்ம நபா்களை தேடுகின்றனா்.