நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய திருச்சி தேசிய கல்லூரி மாணவருக்கு கல்லூரி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது இந்தோ-நேபாள கிராமப்புற இளைஞா் விளையாட்டு (2020-21) சா்வதேச அளவிலான பூப்பந்தாட்டப் போட்டியின் சீனியா் இரட்டையா் பிரிவில் தேசியக் கல்லூரி பி.எஸ்.சி. உடற்கல்வி முதலாமாண்டு மாணவா் ஜே. சந்தோஷ், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவா் தா்தன்குமாா் ஆகியோா் விளையாடி தங்கப் பதக்கம் வென்றனா்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை திருச்சிக்கு வந்த இருவருக்கும் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் தேசிய கல்லூரி முதல்வா் ஆா். சுந்தரராமன், கல்லூரித் துணை முதல்வா் மற்றும் உடற்கல்வித் துறைத் தலைவா் பிரசன்ன பாலாஜி, பேராசிரியா் ஜாபிா் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.