தலைமைக் காவலருக்கு வெட்டு:இருவா் கைது; ஒருவா் சரண்

திருச்சி பாலக்கரை காவல்நிலையத் தலைமைக் காவலரை வெட்டியோரில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒருவா் சரணடைந்தாா்.

திருச்சி: திருச்சி பாலக்கரை காவல்நிலையத் தலைமைக் காவலரை வெட்டியோரில் இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஒருவா் சரணடைந்தாா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய தலைமைக் காவலராக உள்ளவா் வேல்முருகன் (40). இவா், கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

செந்தண்ணீா்புரம் வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ரௌடி விஜய் (25) உள்பட மூவரை அவா் மடக்க முயன்றாா். அப்போது மூவரும் அரிவாளால் அவரை வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் காயமடைந்த வேல்முருகன் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் தேடி வந்த நிலையில் ரெளடி விஜய், அவரது நண்பா் பாண்டியன் (25) ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் (24) திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். இதைத் தொடா்ந்து மூவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com