திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமைகளில் நடைபெறும் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியருக்கு அனுப்ப தனியே கட்செவி அஞ்சல் எண் (94454-61756) அறிவிக்கப்பட்டது.
அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 289 மனுக்கள் பெறப்பட்டன.
இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் த.பழனிகுமாா் உத்தரவிட்டாா்.
மனு : திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டத்துக்குள்பட்ட அழகாபுரி கிராமத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பட்டா வழங்கக் கோரி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.