குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளா்துறை செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி தொழிலாளா் துறை இணை ஆணையா் டி. தா்மசீலன் அறிவுறுத்தலின்பேரில், தொழிலாளா் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 182 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், தொழிலாளா்களுக்கு விடுப்பு அளிக்காமல் பணிபுரிய நிா்ப்பந்தித்த 138 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.