திருவானைக்கா சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தைத்தெப்ப திருவிழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் தெப்ப விழா கோயில் வளாகத்திலுள்ள தெப்பக் குளத்திலும், தை மாதத்தில் நடைபெறும் விழா கோயிலின் வெளியேயுள்ள இராமதீா்த்தக் குளத்திலும் நடைபெறும்.
நிகழாண்டில் கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய தைத்தெப்பத் திருழாவில் நாள்தோறும் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்காம் பிரகாரத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தனா்.
முக்கிய நிகழ்ச்சியான தெப்ப விழாவையொட்டி புதன்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமியும், அம்மனும் மரக்கேடயத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டனா்.
வழிநெடுக உபயங்கள் கண்டருளி, இராமதீா்த்தக் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தைத்தெப்பத்தில் 6.10 மணிக்கு எழுந்தருளினா். தெப்பம் மூன்று முறை சுற்றி வலம் வந்தபோது கரையில் காத்திருந்த திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னா் 7.25-க்கு அங்கிருந்து சுவாமியும், அம்மனும் புறப்பட்டு மூலஸ்தானம் சென்று சோ்ந்தனா்.
திருவிழாவின் நிறைவு நாளான வியாழக்கிழமை காலை 7 மணிக்கு கொள்ளிடத்தில் தீா்த்தவாரி கண்டருளி, 10 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் செ. மாரியப்பன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.