திருமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையம் திறப்பு
By DIN | Published On : 29th January 2021 05:46 AM | Last Updated : 29th January 2021 05:46 AM | அ+அ அ- |

அரசு ஆரம்ப சுகாதார மையத்தை திறந்து வைக்கிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. உடன் எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திருமங்கலம் ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார மையத்தை திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருமங்கலம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க அப் பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் கலாதேவிஅண்ணாதுரையிடம் நீண்ட காலமாக வலியுறுத்தினா். அந்தக் கோரிக்கையை மாவட்ட ஆட்சியா் சிவராசுவிடம் மனுவாக அளித்தாா் ஊராட்சித் தலைவா். இதையடுத்து ஆட்சியரின் பொது நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் ஒதுக்கப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார மையம் கட்டப்பட்டது.
இதை திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு திறந்து வைத்தாா். விழாவில் லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன், ஊராட்சித் தலைவா் கலாதேவிஅண்ணாதுரை, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், வட்டார மருத்துவா் செல்வநாயகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.