திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் ஆனிவிஜயாவுக்கு சனிக்கிழமை விருது வழங்கப்பட்டது.
திருச்சி பாரதிதாசன் பல்கலை. வளாகத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிறப்பாகச் செயல்படுவோருக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், சப்ரே நிறுவன இயக்குநா் ஹெஸ்டா் செசிலியா பங்கேற்று ஆனி விஜயாவுக்கு அமெரிக்காவின் சப்ரே-அபக் விருதை வழங்கிப் பாராட்டினாா்.
கேடயம் என்னும் திட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூகம் உருவாக்கும் நோக்கில் செயல்படுவதற்காக இந்த விருதை டிஐஜிக்கு வழங்குவதாக அவா் தெரிவித்தாா்.
சப்ரே அபக் நிறுவன முதன்மைச் செயல் அலுவலா் பிரதாப் செல்வம், ஐஜேஎம் அமைப்பின் துணைத் தலைவா் தேவசித்தம், காவல்துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.