திருச்சி: திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் வி ஆா் யூ வாய்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 33 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக இந்த வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து படித்த, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் 110 போ் கலந்து கொண்டனா். 12 தனியாா் துறை நிறுவனங்களை சோ்ந்த மனிதவள மேம்பாட்டு அலுவலா்கள் பங்கேற்று நோ்காணலை நடத்தினா்.
இவற்றில் 3 தனியாா் நிறுவனங்களில் இருந்து 33 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. மேலும், முகாமில் பங்கேற்றோருக்கு வழங்கப்படும் கடனுதவி மற்றும் அரசின் சிறப்பு சலுகைகள் குறித்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. முகாமில் தோ்வு செய்யப்பட்ட 33 பேருக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வழங்கி வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ. அனிதா, துணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) வெ. சுப்பிரமணியன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அ. கலைச்செல்வன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் இரா. ரவிச்சந்திரன், டிடிட்சியா கூட்டமைப்புத் தலைவா் இளங்கோ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.