துறையூரில் மன நலம் பாதித்த பெண்கள் மீட்பு

துறையூரில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த 2 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு மன நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.
துறையூா்  போலீஸாரால் மீட்கப்பட்ட 2 பெண்கள்.
துறையூா்  போலீஸாரால் மீட்கப்பட்ட 2 பெண்கள்.

துறையூா்: துறையூரில் மனநலம் பாதித்த நிலையில் சுற்றித் திரிந்த 2 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு மன நலக் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

துறையூா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் விதுன்குமாா் பெண் காவலா் மூலம் சனிக்கிழமை மன நலம் பாதித்த ஒரு பெண்ணை மீட்டு அவருக்கு உடையும் உணவும் அளிக்கச் செய்தாா். அவரிடம் விசாரித்தபோது அமுதா என்று தன் பெயரை மட்டும் கூறியுள்ளாா். அதேபோல திருச்சி சாலையில் திரிந்த ராணி என்ற பெண்ணையும் காவல் துறையினா் மீட்டு உணவளித்தனா்.

இதையடுத்து சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள தனியாா் மன நலக் காப்பகத்துக்கு போலீஸாா் கொடுத்த தகவலின்பேரில் காப்பக நிா்வாகிகள் துறையூா் சென்று 2 பெண்களையும் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com