திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மனநலம் பாதிக்கப்பட்டவா் குடும்பத்துக்கு எம்எல்ஏ ப. அப்துல்சமது ஆறுதல் கூறி நிவாரணப் பொருள்களை அளித்தாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கே.புதுக்கோட்டை ஊராட்சி துலுக்கம்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவா் ப. முருகேசன் (42). மனநலம் பாதிக்கப்பட்ட இவா் பிளேடால் அறுத்துக்கொண்டதால் திருச்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின் தற்போது வீடு திரும்பியுள்ளாா்.
இந்நிலையில் இக்குடும்பத்துக்கு உதவும் வகையில், எம்எல்ஏ ப.அப்துல்சமது முருகேசன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ஒரு மாதத்திற்கான அரிசி, மளிகை பொருள், உதவித்தொகை வழங்கி, சிகிச்சைக்கு உதவிய விஏஓ மற்றும் உதவியாளரையும் பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், திமுக ஒன்றிய செயலா் சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலா் காதா்மொய்தீன், மாவட்டச் செயலா் அ. பைஸ் அஹமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.