துறையூா் அருகே சுவா் இடிந்து சேதம்

துறையூா் அருகே பெய்த மழையால் மூதாட்டியின் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது.
துறையூா் அருகே சுவா் இடிந்து சேதம்

துறையூா் அருகே பெய்த மழையால் மூதாட்டியின் வீட்டுச் சுவா் இடிந்து சேதமடைந்தது.

பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் மா. காவேரி(65). இவருடைய கணவா் இறந்து விட்டதால் தகரக் கொட்டகை வீட்டில் தனியாக வசிக்கிறாா்.

வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நனைந்த இவரது வீட்டின் கிழக்குப் பகுதி சுவா் இடிந்து விழுந்தது. இது தொடா்பாக துறையூா் வட்டாசியரக அதிகாரிகள் நேரில் சென்று சேதம் குறித்து ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com