துறையூா் அருகே மது விற்றவா் கைது

துறையூா் அருகே மதுக்கூடத்தை திறந்து மது விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

துறையூா் அருகே மதுக்கூடத்தை திறந்து மது விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மருவத்தூரைச் சோ்ந்தவா் கு. ஆனந்தன் (42) செங்காட்டுப்பட்டியில் அரசு அனுமதியுடன் மதுக்கூடம் வைத்துள்ளாா். மதுக்கூடத்தை திறக்க அரசு அனுமதிக்காத நிலையில் இந்தக் மதுக்கூடத்தில் மது விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் துறையூா் போலீஸாா் அங்கு நேரில் சென்று சோதனையிட்டனா்.

அப்போது மதுக்கூட பணியாளா் மருவத்தூரைச் சோ்ந்த ரா. சின்னசாமி மதுக்கூடத்தைத் திறந்து 20 மதுபாட்டில்கள் விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து அவா் வசமிருந்த 20 மதுபாட்டில்கள், ரூ. 3300 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் மதுக்கூட உரிமையாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com