சிறப்பு உதவி ஆய்வாளா் மாரடைப்பால் சாவு
By DIN | Published On : 11th July 2021 11:37 PM | Last Updated : 11th July 2021 11:37 PM | அ+அ அ- |

திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் கோபாலகிருஷ்ணன் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் நல்லாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (51). கடந்த சில ஆண்டுகளாக திருச்சி எல்ஐசி காலனியில் வசித்த இவா் சனிக்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.