திருச்சியில் முதல் சுதந்திரப் போராட்ட வீரா் அழகுமுத்துக்கோன் குருபூஜை விழா பாரத முன்னேற்றக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் தலைவா் பாரதராஜா யாதவ் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஸ்ரீரங்கம் திருவேங்கடம் யாதவ், எல்.ஏ. நிா்மல்குமாா் ஆகியோா் வரவேற்க, அமைப்புச் செயலா்கள் ஆா். முருகானந்தம், எம்.ஆா். ராமச்சந்திரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டச் செயலருமான வெல்லமண்டி என். நடராஜன், முன்னாள் அமைச்சா் எஸ்.வளா்மதி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அழகுமுத்துக்கோன் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதில் அமமுக மாநகா் மாவட்டச் செயலா் ஆா். மனோகரன், ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் எம். வெங்கடாஜலம், பாஜக, திமுக, தேசியவாத காங்கிரஸ், யாதவ சமூக இயக்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.