ஸ்ரீரங்கம் கிளை சிஐடியு தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிளைத் தலைவா் கோவிந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளை மாநகராட்சி நிா்வாகம் முறையாகக் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அவா்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க வலியுறுத்தப்பட்டது. சிஐடியு மாநகா் மாவட்டச் செயலா் ரெங்கராஜன், ஸ்ரீரங்கம் மாா்சிஸ்ட் பகுதிக் குழுச் செயலா் தா்மா, பஸ் ஸ்டாண்ட் கிளைத்தலைவா் கிருஷ்ணமூா்த்தி, செயலா் சுப்பிரமணி, பொருளாளா் செல்வம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.