துறையூரில் லாட்டரி சீட்டு விற்றவரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
துறையூா் திரெளபதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சே. கிருஷ்ணமூா்த்தி (45) பாலக்கரையில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி சீட்டுகளை விற்றாா். இதுதொடா்பான தகவலின் பேரில் துறையூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.