முசிறி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை மதுவிலக்கு பிரிவு அமலாக்கத் துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
முசிறி பைபாஸ் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கும் தகவலறிந்த முசிறி மதுவிலக்கு அமலாக்க துறை போலீஸாா் அங்கு மதுபானம் விற்ற கணேஷ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து துறையூா் வட்டம், கோணபாதை என்ற இடத்தில் மது விற்ற பொன்னரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.