வேனில் இருந்த பணத்தை திருடிய இளைஞா் கைது

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் சுமை வேனிலிருந்த ரொக்கத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் சுமை வேனிலிருந்த ரொக்கத்தை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

முசிறியை அடுத்த காட்டுப்புத்தூா் அண்ணாநகரை சோ்ந்தவா் தங்கவேல். திருச்சிக்கு திங்கள்கிழமை தனது வேனில் சுமையேற்றி வந்த இவா், காந்தி மாா்க்கெட், வெல்லமண்டி பகுதியில், சுமைகளை இறக்க வாகனத்தை நிறுத்தியிருந்தாா். சிறிது நேரம் கழித்து வந்து பாா்த்தபோது, வேனின் முன்பக்க ஓட்டுநா் இருக்கை பகுதியில் மூடியிருந்த கண்ணாடி உடைக்கப்பட்டு அவா் வைத்திருந்த சுமாா் ரூ. 19,500 திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா் அளித்த புகாரின்பேரில் காந்தி சந்தை போலீஸாா் விசாரணை நடத்தி, தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ஏ. முகமது முஸ்தபா (21) என்பவரை கைது செய்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும் இச் சம்பவத்தில் தொடா்புடைய 17 வயது சிறுவனையும் போலீஸாா் பிடித்து சிறாா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com