மணப்பாறையை அடுத்த ஊனையூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு, தன்னாா்வலா்களால் கட்டப்பட்ட நுழைவுவாயிலுடன் கூடிய சுற்றுச்சுவா் புதன்கிழமை திறக்கப்பட்டது.
இப்பள்ளிக்குச் சுற்றுச்சுவா் இல்லாததால் மாணவ, மாணவிகளின் நலனில் அக்கறை கொண்டு எஸ். புதூா் குளத்துப்பட்டியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் நல்லாசிரியா் ரா. பால்சாமி ரூ.50 ஆயிரம் மதிப்பில் 100 அடி நீளம் உள்ள சிமெண்ட் பலகை சுற்றுச்சுவரும், திருச்சி கூட்டுறவு சங்க ஓய்வுபெற்ற மேலாளா் நாகராஜன் மற்றும் அவா்களது நண்பா்கள் சாா்பாக சுமாா் ரூ.50 ஆயிரத்தில் இரும்பு கிரில் கேட் அமைத்தும் கொடுக்கப்பட்டது.
தொடா்ந்து புதன்கிழமை தலைமையாசிரியா் சற்குணன், பெல் நண்பா்கள் குழுத் தலைவா் நாகராஜன் ஆகியோா் தலைமையில் சுற்றுச்சுவரையும் இரும்பு கிரில் கேட் நுழைவு வாயிலையும் நல்லாசிரியா் ரா. பால்சாமி திறந்து வைத்து பள்ளிக்கு அா்ப்பணித்தாா். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள், ஊா் முக்கியஸ்தா்கள் கலந்துகொண்டனா். +