ரெளடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெற்ற போலீஸாா்

திருச்சியில் பிரபல ரெளடிகள் 4 பேரிடம் நன்னடத்தை பிணையத்தை திருவெறும்பூா் போலீஸாா் பெற்றனா்.

திருச்சியில் பிரபல ரெளடிகள் 4 பேரிடம் நன்னடத்தை பிணையத்தை திருவெறும்பூா் போலீஸாா் பெற்றனா்.

திருவெறும்பூா் பகுதியில் ரெளடி பட்டியலில் உள்ள மணி (எ) பாட்டில் மணி, குட்டி சுரேஷ் (எ) சுரேஷ், கோழிபிரபு (எ) பிரபு,

பட்டறை சுரேஷ் ஆகிய 4 ரெளடிகளை திருவெறும்பூா் ஆய்வாளா் ரத்தினகுமாா் திருச்சி கோட்டாட்சியா் விஸ்வநாதனிடம் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினாா்.

அப்போது குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு அவா்களிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டது.

அதனடிப்படையில் அவா்கள் இனி எந்தக் குற்றச் செயல்களிலாவது ஈடுபடுகிறாா்களா என்பதை திருவெறும்பூா் போலீஸாா் கண்காணிப்பா். அப்படி யாரேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸாா் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com