மணப்பாறையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் சனிக்கிழமை 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனா்.
காந்திநகா் பகுதியில் வசிப்பவா் முனியாண்டி மனைவி செல்லம்மாள் (58). சனிக்கிழமை இரவு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மூதாட்டியிடம், எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினா். மணப்பாறை போலீஸாா் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரிக்கின்றனா்.