திருச்சியில் மேலும் 84 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,389 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,199 ஆக உள்ளது. இதுவரை 944 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,246 ஆக உள்ளது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,857 படுக்கைகள், அவசரப் பிரிவில் 365 படுக்கைகள், 1,205 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,427 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com