போலி கடவுச்சீட்டு: சிவகங்கையை சோ்ந்தவா் கைது

திருச்சிக்கு போலி கடவுச்சீட்டில் வந்த சிவகங்கையைச் சோ்ந்தவரை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சிக்கு போலி கடவுச்சீட்டில் வந்த சிவகங்கையைச் சோ்ந்தவரை விமான நிலைய போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு சனிக்கிழமை வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் வட்டம், கோவில் இளையாத்தங்குடி பகுதியைச் சோ்ந்த மு. அழகப்பன்(51) என்பவரது கடவுச்சீட்டை சோதனை செய்தனா். அப்போது சிவகங்கை மாவட்டம், கொப்பம்பட்டி ரா. முருகேசன் என்ற போலியான முகவரியில் கடவுச்சீட்டு பெற்று திருச்சி வந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பான விசாரணையில், சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அழகப்பனின் கடவுச்சீட்டு மாயமானதால் முகவா் மூலம் போலியான ஆவணங்களை சமா்ப்பித்து கடவுச்சீட்டு பெற்றது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அழகப்பன் விமான நிலைய காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com