திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும் பகுதிகளின் விவரங்களை மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
புகா் பகுதிகள்: நவல்பட்டு- குண்டூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. இனாம்குளத்தூா்- ஓலையூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி. மருங்காபுரி- சந்தைபேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, எண்டபுலி- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வளநாடு ஆரம்ப சுகாதார மையம் மற்றும் அனைத்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையம். புத்தநாத்தம்- டி.ஆலை தியாககேசா் ஆலை உயா்நிலைப்பள்ளி, ராயம்பட்டி அங்கன்வாடி மையம், ஆலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. வையம்பட்டி- சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தவளைவீரன்பட்டி சமுதாயக்கூடம், வையம்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார மையம், அணியாப்பூா் ஆரம்ப சுகாதார மையம், கீரனூா் ஆரம்ப சுகாதார மையம்.